• August 22, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ‘இந்து தமிழ் திசை’ நாளேட்​டில் செய்தி வெளி​யானதை தொடர்ந்து வெளி​மாநில தமிழ்ச் சங்க பள்​ளி​களுக்கு பாடநூல்​களை தொடர்ந்து இலவச​மாக அளிக்க தமிழக அரசு அரசாணை வெளி​யிட்டுள்​ளது. நாட்​டின் பிற மாநிலங்​களின் முக்​கிய நகரங்​களில் தமிழ்ச் சங்​கங்​கள் செயல்​பட்டு வரு​கின்​றன.

இந்த சங்​கங்​களாலும் தமிழ் கல்வி அமைப்​பு​களாலும் நடத்​தப்​படும் பள்​ளி​களில் தமிழ்​வழிக் கல்வி மற்​றும் தமிழ் பாடப்​பிரிவுக்கு நூல்​கள் தேவைப்​படு​கின்​றன. இவை நீண்ட வருடங்​களாக தமிழ்​நாடு பாடநூல் மற்​றும் கல்​வி​யியல் பணி​கள் கழகத்​தின் சார்​பில் இலவச​மாக வழங்​கப்​பட்டு வந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *