• August 22, 2025
  • NewsEditor
  • 0

பிலாஸ்​பூர்: நாய் அசுத்​தம் செய்த மதிய உணவைச் சாப்​பிட்ட 84 மாணவர்​களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்​க வேண்​டும் என்று சத்​தீஸ்​கர் மாநில அரசுக்கு உயர் நீதி​மன்​றம் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. சத்​தீஸ்​கர் மாநிலம் பலோ​டாபஜார்​-ப​டாப்​புரா மாவட்​டத்​தில் உள்ள அரசு நடுநிலைப் பள்​ளி​யில் மாணவர்​களுக்கு மதிய உணவு வழங்​கப்​பட்​டது. அப்​போது, மதிய உணவுத் திட்ட ஊழியர்​கள், நாய் அசுத்​தம் செய்த உணவை 84 மாணவர்​களுக்கு வழங்​கி​விட்​ட​தாகத் தெரிய​வந்​துள்​ளது.

விவரம் அறிந்த பின்​னர் அந்த மாணவர்​களுக்கு 3 டோஸ் ரேபீஸ் தடுப்​பூசியை செலுத்த மாவட்ட நிர்​வாகம் உத்​தர​விட்​டது. இதனிடையே இந்த விவ​காரத்​தை அரசின் கவனக்​குறைவு என்று கூறி சத்​தீஸ்​கர் உயர் நீதி​மன்​றம் தாமாகவே முன்​வந்து வழக்கு பதிவு செய்​தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமேஷ் சின்​ஹா, நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு நேற்று விசா​ரணைக்கு வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *