• August 22, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி: திருநெல்​வேலி​யில் இன்று நடை​பெறும் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்​றுப் பேசுகிறார். பாஜக சார்​பில் பூத் கமிட்டி மண்டல மாநாடு தமிழகம் முழு​வதும் 7 இடங்​களில் நடை​பெற உள்ளது. முதல் மாநாடு நெல்​லை​யில் இன்று நடை​பெறுகிறது. வண்​ணார்​பேட்டை சத்​திரம் புதுக்​குளம் பகு​தி​யில் உள்ள ரயில்வே மேம்​பாலம் அருகே நடை​பெறும் இந்த மாநாட்​டில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா பங்​கேற்று சிறப்​புரை​யாற்​றுகிறார்.

பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய அமைச்​சர் எல்​.​முரு​கன், கட்​சி​யின் முன்​னாள் மாநிலத் தலை​வர்​கள் அண்ணா​மலை, தமிழிசை சவுந்​தர​ராஜன், பொன்​.​ரா​தாகிருஷ்ணன், ஹெச்​.​ராஜா, தேசிய பொதுச் செய​லா​ளர் பி.எல்​.சந்​தோஷ், தேசிய மகளிரணித் தலை​வர் வானதி சீனி​வாசன் உள்ளிட்டோர் பங்​கேற்​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *