
சென்னை: தமிழக அரசின் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மைய சங்கத்தின் தலைவர் எஸ்.மதுரம், பொதுச்செயலாளர் பெ.முனியப்பன் ஆகியோர் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: பணி நிரந்தரம் கோரி சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த வேறொரு இடத்தை ஒதுக்குமாறும், அவர்களை கைதுசெய்ய வேண்டாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தூய்மை பணியாளர்களை பெண்கள் என்றும் பாராமல் காவல்துறையினர் கைது செய்தது கண்டனத்துக்குரியது.
தற்போது, சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பல்வேறு மாநகராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் போராடினால் அவர்களை காவல் துறையினர் கைது செய்வதை, போராட்டத்தை ஒடுக்கும் செயலாக கருதுகிறோம்.