• August 21, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக அரசின் அலு​வலக உதவி​யாளர்​கள் மற்​றும் அடிப்​படை பணி​யாளர் மாநில மைய சங்​கத்​தின் தலை​வர் எஸ்.மதுரம், பொதுச்​செய​லா​ளர் பெ.​முனியப்​பன் ஆகியோர் நேற்று வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: பணி நிரந்​தரம் கோரி சென்னை மாநக​ராட்சி தூய்மை பணி​யாளர்​கள் போராட்​டம் நடத்த வேறொரு இடத்தை ஒதுக்​கு​மாறும், அவர்​களை கைதுசெய்ய வேண்​டாம் என்​றும் சென்னை உயர்​நீ​தி​மன்​றம் உத்​தர​விட்​டிருந்த நிலை​யில், தூய்மை பணி​யாளர்​களை பெண்​கள் என்​றும் பாராமல் காவல்​துறை​யினர் கைது செய்​தது கண்​டனத்​துக்​குரியது.

தற்​போது, சென்னை மாநக​ராட்சி தூய்மை பணி​யாளர்​களுக்கு ஆதர​வாக தமிழகம் முழு​வதும் பல்​வேறு மாநக​ராட்​சிகளில் பணி​யாற்​றும் தூய்மை பணி​யாளர்​கள் போராடி​னால் அவர்​களை காவல் துறை​யினர் கைது செய்​வதை, போராட்​டத்தை ஒடுக்​கும் செய​லாக கருதுகிறோம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *