
புதுடெல்லி: தீபாவளி, சத் பண்டிகைகளுக்காக 12,000-க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ரயில் பவனில் செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "தீபாவளி, சத் பண்டிகைகளின் போது பயணிகளின் வசதிக்காக 12,000-க்கும் அதிகமான சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. மேலும், அக்டோபர் 13 – 26 இடையேயான நாட்களில் பயணம் செய்வோருக்கும், நவம்பர் 17 – டிசம்பர் 1 இடையேயான நாட்களில் திரும்புவோருக்கும் கட்டணங்களில் 20 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும்" என தெரிவித்தார்.