
சென்னை: பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “இஸ்லாமிய மதமாற்றத்தை தடுத்ததால், தஞ்சை திருப்புவனம் பாமக நகரச் செயலாளர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பிக்க, தலைமறைவாக இருக்க இடம் கொடுத்ததாக தமிழகத்தில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.