
சிவகங்கை: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2 பேருக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கியதால் அதைச் சரிசெய்ய முடியாமல் 8 ஆண்டுகளாக மாணவி ஒருவர் போராடி வருகிறார். அரசின் பல்வேறு ஆவணங்களைப் பெறு வதற்கும், தேர்வுகள், அரசின் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆதாரை போலியாக தயாரித்து நலத்திட்ட உதவிகள், தனியார் வங்கிகளில் கடன் பெறுவது உள்ளிட்ட மோசடிகளில் சிலர் ஈடுபடுகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையமும் ஆதாரை ஓர் ஆவணமாக ஏற்க மறுத்து வருகிறது. இதனால் ஆதார் மீதான நம்பகத் தன்மையே கேள்விக்குறியாக உள்ள நிலையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையமே 2 பேருக்கு ஒரே ஆதார் எண்ணை வழங்கியிருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.