
புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் ரீவாவில் உள்ள கோர்கி கிராமத்தில் பழமையான காஜி மியான் தர்கா உள்ளது. குர் காவல் நிலைய பகுதியில் அமைந்துள்ள இந்த தர்காவுக்குள் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் இரவு நேரத்தில் புகுந்துள்ளது. உள்ளே இருந்த தர்காவின் மஸார் எனும் சமாதியை கும்பல் சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளது.
மறுநாள் காலை தர்கா சேதம் அடைந்துள்ளதை பார்த்து உள்ளூர் முஸ்லிம்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.