• August 21, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குறை​கேட்பு கூட்​டத்​துக்கு மனு அளிப்​பது போல் வந்​து, டெல்லி முதல்​வர் ரேகா குப்​தாவை தாக்​கிய நபர் மீது போலீஸார் கொலைமுயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர். டெல்லி முதல்​வர் ரேகா குப்தா தனது இல்​லத்​தில், பொது மக்​கள் குறை​கேட்பு கூட்​டத்தை நேற்று நடத்​தி​னார். அங்கு குஜ​ராத்​தின் ராஜ்கோட் பகு​தி​யைச் சேர்ந்த ராஜேஷ் சக்​ரியா என்​பவர் முதல்​வரிடம் புகார் மனு அளிக்க வந்​தார்.

அவரை காவலர்​கள் சோனை செய்து அனுப்​பினர். மனு அளிக்க முதல்​வர் ரேகா குப்​தாவை நெருங்​கிய அவர் சிறிது நேரம் பேசி​னார். பின்​னர் முதல்​வரை திட்​டிய அவர் திடீரென அவரை கன்​னத்​தில் அறைந்​தார். முதல்​வரை தள்​ளி​விட்​டபின், அவரது தலை முடியை பிடித்​தும் இழுத்​தார். அதற்​குள் முதல்​வரின் பாது​காவலர்​கள் பாய்ந்து சென்று ராஜேஷை பிடித்து மடக்​கினர். அவர் உடனடி​யாக கைது செய்​யப்​பட்​டார். அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *