
புதுடெல்லி: கடந்த 1975 முதல் 1977 வரையிலான அவசரநிலை காலத்தில் அப்போதைய இந்திரா காந்தி அரசின் அத்துமீறல்கள், முறைகேடுகள் குறித்து நீதிபதி ஷா ஆணையம் விசாரணை மேற்கொண்டது. அதன் அறிக்கை நாடாளுமன்றத்தில் 1978-ம் ஆண்டு ஆகஸ்ட் 31-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அமல்படுத்தியதில் பலத்தை பிரயோகித்தது குறித்தும் அதன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான விவரத்தை மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் பகிர்ந்து கொண்டார்.