
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த 34 நாட்களில் 10,000 கி.மீ. தூரம் பயணம் செய்து, 100 தொகுதிகளில் ‘மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்’ பிரச்சாரத்தை நிறைவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்திக்கும் வகையில் ‘மக்களை காப்போம், தமிழகம் மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்கினார்.
விவசாயிகள், வியாபாரிகள், நெசவாளர்கள், மீனவர்கள் என பல்வேறு தரப்பினருடன் 150-க்கும் மேற்பட்டகலந்துரையாடல்களில் பங்கேற்று அவர்களின் பிரச்சினைகளை நேரடியாக கேட்டறிந்தார். அவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள், தீர்வுகளையும் வழங்கினார்.