
சென்னை: கோயில் நிதியை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவது சமுதாயத்தின் மீதான மறைமுக தாக்குதல் என இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயில்களின் நிதியிலிருந்து திருமண மண்டபம் கட்டும் அரசாணையை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கோயில் நிதியும், கோயில் நிலமும் கோயிலுக்கும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதுதான் சட்டம்.