
புதுடெல்லி: குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற விசாரணையில், ‘ஆளுநர் ஒன்றும் தபால்காரர் இல்லை. அவர் மத்திய அரசின் பிரதிநிதி’ என்று மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு கால நிர்ணயம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிபி.ஆர்.கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வில் நேற்று 2-வது நாளாக நடந்தது. அப்போது நடந்த வாதம்: