
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது 50-வது திருமண நாளை முன் விட்டு, கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடம், மனைவி துர்காவுடன் சென்று வாழ்த்து பெற்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் – துர்கா தம்பதியினர் தங்களின் 50-வது ஆண்டு திருமண நாளை நேற்று கொண்டாடினர். இதை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் மற்றும் துர்கா ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்வரும். இரவு விருந்து அளித்தார்.