• August 21, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல் / தென்காசி: திருபுவனம் பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கொடைக்கானலில் பிரியாணி கடை நடத்திவந்த இம்தாலுல்லா என்பவர் கைது செய்யப்பட்டார். இதேபோல, தென்காசியிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் 2019 பிப்ரவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். மதமாற்றம் செய்வதை ராமலிங்கம் கண்டித்ததே கொலைக்கான காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டு. விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் 18 பேர் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், 5 பேர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டனர். கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் பதுங்கியிருந்த முகமது அலி என்பவரை கடந்த ஆண்டு என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *