
சென்னை: போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் காப்பீட்டு உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது. போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் புதிய காப்பீட்டு உதவி மையத்தை அந்நிறுவனத்தின் தலைவர் கிரிஜா சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.
மருத்துவக் காப்பீடு தொடர்பான தகவல்கள், கோரிக்கைக்கான தீர்வுகளை நோயாளிகளுக்கு உடனுக்குடன் வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.