• August 20, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றம் தனக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அரசி​யல் சாசனத்தை மாற்றி எழுத முடி​யாது என உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தரப்​பில் ஆஜரான அட்​டர்னி ஜெனரல் கார​சா​ர​மாக வாதிட்​டார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்ட 10 சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் கிடப்​பில் போட்​டதையடுத்து தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தது.

அந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜெ.பி.பர்​தி​வாலா, ஆர்​.ம​காதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, உச்ச நீதி​மன்​றத்​துக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அந்த 10 மசோ​தாக்​களுக்​கும் ஒப்​புதல் அளித்​தனர். மேலும், சட்​டப்​பேர​வை​யில் மறுநிறைவேற்​றம் செய்​யப்​படும் மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒரு மாத காலத்​தி​லும், குடியரசுத் தலை​வர் 3 மாத காலத்​தி​லும் ஒப்​புதல் அளிக்க வேண்​டு மென கால நிர்​ண​யம் செய்​தும் உத்​தர​விட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *