
திருநெல்வேலி: திருநெல்வேலியில் நாளை நடைபெறவுள்ள பாஜக மண்டல பூத் கமிட்டி மாநாடு, அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
பாளையங்கோட்டையில் ஒண்டிவீரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் தமிழ் மக்களுக்காக பாடுபட்டவர். இலங்கை இனப்படுகொலைக்கு எதிராக போராடியவர். அவருடைய தமிழ் உணர்வு பாராட்டுக்குரியது.