• August 20, 2025
  • NewsEditor
  • 0

திரு​மலை: திருமலை திருப்​பதி தேவஸ்​தானம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஹைத​ரா​பாத்தை சேர்ந்த விஸ்​வ​நாத் குடும்​பத்​தினருக்கு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்து தரு​வ​தாக கூறி, நடராஜ் நரேந்​திர குமார் மற்​றும் நடராஜ் சர்மா ஆகியோர் ரூ.90 ஆயிரம் பெற்​றுள்ளனர். அதன் பிறகு பணத்தை கேட்​கும்​போதெல்​லாம் ஏதாவது காரணத்தை கூறி ஏமாற்றி உள்​ளனர்.

இதுதொடர்​பாக விஸ்​வ​நாத் குடும்​பத்​தினர் திரு​மலை விஜிலென்ஸ் அதி​காரிகளிடம் புகார் அளித்​தனர். விசா​ரணை​யில், பணத்தை பெற்ற இரு​வரும் திருப்​பதி தேவஸ்​தான ஊழியர்​கள் இல்லை என்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இரு​வரும் 15-க்​கும் மேற்​பட்ட பக்தர்களை ஏமாற்றி பணம் பறித்​திருப்​பதும் தெரிய​வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *