• August 20, 2025
  • NewsEditor
  • 0

மதுரை தவெக மாநாடு

மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு நாளை ஆகஸ்ட் 21-ம் தேதி நடக்கவுள்ளது. 500 ஏக்கரில் மாநாட்டுக்கான திடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், சுமார் 10 லட்சம் தொண்டர்களைத் திரட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

‘மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் விஜய்’ என்ற வாசகத்தை பிரதானமாகப் பயன்படுத்தி மதுரையில் நடைபெறும் தவெக மாநாடு மேடையின் உச்சியில் திமுக நிறுவனரான அண்ணா மற்றும் அதிமுக நிறுவனரான எம்ஜிஆர் ஆகிய இருவரின் படங்கள் இடம்பெற்றுளது. இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியிருக்கிறது.

தவெக நிர்வாகி நிர்மல்குமார் பதில்

தவெக நிர்வாகி நிர்மல் குமார் விளக்கம்

இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் தவெக நிர்வாகி சிடி நிர்மல் குமார், “அண்ணா மற்றும் எம்ஜிஆர் இருவருமே பொதுவாக மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர்கள். அதனால் அவர்களின் புகைப்படங்களைப் பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை.

அவர்கள் யாருக்கும் தனிப்பட்ட தலைவர்கள் கிடையாது. இங்கே அம்பேத்கர், பெரியார் ஆகியோரின் புகைப்படங்கள் உள்ளது. அவர்கள் அனைவரும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர்கள்.

மக்கள் விரும்பும் தலைவர்கள். விஜய்காந்த் படங்களை அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று தேமுதிக தரப்பில் கூறப்பட்டிருகிறது. அதனால் அவர் படத்தை எங்கும் பயன்படுத்தவில்லை” என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *