
பெங்களூரு: பெங்களூருவில் 4 வயது குழந்தையை தெரு நாய் கடித்ததில் ரேபீஸ் நோய் தாக்கி, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். கர்நாடக மாநிலத்தில் தெரு நாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
நிகழாண்டில் ஜூலை வரை 2.81 லட்சம் பேர் நாய்க்கடிக்கு ஆளாகியுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் அண்மையில் உத்தரவிட்டார்.