
புதுடெல்லி: இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் ரூ.75,000 கோடியில் 3 கப்பல் கட்டும் தளங்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய துறைமுக அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் 3 கப்பல் கட்டும் தொகுப்புகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு பசுமைக்கள (கிரீன்பீல்டு) கப்பல் கட்டும் தொகுப்பும் ரூ.25,000 கோடியில் உருவாக்கப்படும்” என்று தெரிவித்துள்ளன.