
மதுரை: மதுரை பாரப்பத்தியில் நாளை நடக்கும் விஜய் கட்சியின் மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. மாநாட்டு திடல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மதுரை-தூத்துக்குடி சாலையில் உள்ள பாரப்பத்தியில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்கிறது.
சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் வடிவிலான மேடை, பார்வையாளர் கேலரிகள், வாகன பார்க்கிங், மாநாட்டு திடலை சுற்றிலும் கட்சிக் கொடி, தோரணங்கள், பதாகைகள், தற்காலிக கழிப்பறை, குடிநீர், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், திடலைச் சுற்றிலும் வண்ண மின் விளக்குகள் என மாநாடுக்கான பல்வேறு ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.