
சென்னை: முன்னாள் படைவீரர்கள் வாழ்வாதார மேம்பாட்டுக்கான ‘முதல்வரின் காக்கும் கரங்கள்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்து, தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளையும் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க, கொட்டும் மழையிலும், குளிரிலும் தமது இன்னுயிரையும் பொருட்படுத்தாது தாய் நாட்டுக்காக தங்களது இளம் வயதை ராணுவப் பணியில் கழித்து, பணிக்காலம் நிறைவு பெற்ற, ஓய்வுபெற்ற முன்னாள் படைவீரர்களின் நலன் காக்க பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.