
சசோடி: ஜம்மு காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மேகவெடிப்பால் திடீரென பெரு மழை பெய்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்நிலையில் 80 மாணவர்களை காப்பாற்றிய சசோடி கிராம தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஹுக்கும் சந்த் நேற்று கூறியதாவது: எங்கள் கிராமத்தில் சீக்கியர்கள் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக மாணவர்களை உணவு சாப்பிட அனுப்புமாறு அவசரப்படுத்தினர். அப்போது காலை 11.40 மணி இருக்கும். அன்று ஆகஸ்ட் 14-ம் தேதி.