
‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ படங்களை இயக்கிய மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘பைசன்’.
கபடியை மையப்படுத்திய இப்படத்தில் துருவ் விக்ரம், மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நடித்தது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அனுபமா, இயக்குநர் மாரி செல்வராஜின் படங்களில் நடிக்க முடியாமல் போனது பற்றி வருத்தமாகப் பேசியிருக்கிறார்.
இதுகுறித்துப் பேசியிருக்கும் அனுபமா, “பரியேறும் பெருமாள் படக் கதையை இயக்குநர் மாரி செல்வராஜ் என்னிடத்தில் கூறியபோது, நான் பல தெலுங்கு படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருந்ததால் நடிக்க முடியாமல் போனது. அதற்காக மிகவும் வருந்தினேன். அடுத்து அவருடைய ‘மாமன்னன்’ படத்திலும் என்னால் நடிக்க முடியாமல் போனது. ஆனால் ‘பைசன்’ படத்திற்காக அழைத்தபோது, உடனே ஆர்வமாக சென்றுவிட்டேன்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs