• August 19, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்​னை, கொருக்​குப்​பேட்டை போஜ​ராஜன் நகரில், ரூ.30.13 கோடி​யில் கட்​டப்​பட்ட வாகன சுரங்​கப் பாலத்தை துணை முதல்​வர் உதயநிதி திறந்து வைத்​தார். வடசென்​னை, கொருக்​குப்​பேட்டை பகு​தி​யில் உள்ள போஜ​ராஜன் நகர் 3 புற​மும் ரயில்வே இருப்​புப் பாதைகளால் சூழப்​பட்​டுள்​ள​தால், இப்​பகு​தி​யில் உள்ள பொது​மக்​கள் ரயில்வே கடவுப் பாதை மூலமே வெளியே செல்ல முடி​யும். மேலும், அவசர காலங்​களில் அவர்​கள் வெளியே செல்​வது மிக​வும் சிரம​மாக இருந்​தது.

எனவே, இங்கு வசிக்​கும் பொது​ மக்​கள் உள்​ளிட்ட வடசென்​னைப் பகுதி மக்​களின் நீண்ட நாள்கோரிக்​கை​யான, போஜ​ராஜன் நகரில் வாகன சுரங்​கப்​பாதை அமைக்​கும் பணி கடந்த 2023-ம் ஆண்​டு, சென்னை மாநக​ராட்​சி​யின் நிதி​யின் கீழ் ரூ.30.13 கோடி​யில் மதிப்​பீட்​டில் தொடங்​கப்​பட்​டது. இச்​சுரங்​கப் பாதை​யின் நீளம் 207 மீட்​டர், அகலம் 6 மீட்​டர் ஆகும். மேலும், மழைக்காலங்​களில் மழை நீரை வெளி​யேற்ற ஒரு நீர் சேகரிக்​கும் கிணறு, 85 எச்பி திறன் கொண்ட மோட்​டார் பம்​பு​கள் மற்​றும் ஒரு ஜெனரேட்​டர் நிறு​வப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *