
புதுடெல்லி: மியான்மர், கம்போடியா, வியட்நாம் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தபடி சிலர் இணையதள மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் பணப்பரிவர்த்தனைக்காக இதுவரை இந்தியாவைச் சேர்ந்த 1,47,445 வங்கிக் கணக்குகளை சட்டவிரோதமாக பயன்படுத்தி உள்ளது தெரியவந்துள்ளதாக மத்திய உள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2024-ம் ஜனவரி மாத நிலவரப்படி இந்த எண்ணிக்கை 80,465 ஆக இருந்தது.