• August 19, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: ‘இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யாருக்கும் எக்காலத்திலும் அடிபணியாது, என்பதை முன்னாள் முதல்வர் பழனிசாமி அறிந்து கொள்ள வேண்டும்’, என சேலத்தில் நடந்த மாநில மாநாட்டில் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள நேரு கலையரங்கில் கடந்த 4 நாட்களாக நடந்து வருகிறது.

நிறைவு நாளான நேற்று சேலம் குகை பகுதி அருகே உள்ள பெரியார் வளைவில் இருந்து செம்படை பேரணி தொடங்கி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள போஸ் மைதானத்தில் நிறை வடைந்தது. அதைத்தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 101 பேர் கொண்ட புதிய மாநில குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *