
புதுடெல்லி: ராணுவ பயிற்சிப் பள்ளிகளில் காயமடைந்து மாற்றுத் திறனாளியாகும் துணிச்சல்மிகு வீரர்களை ஓரம்கட்டி வீட்டுக்கு அனுப்பாமல், முப்படை அலுவலகங்களில் உட்கார்ந்து பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தேசிய பாதுகாப்பு அகாடமி, இந்திய ராணுவ அகாடமி போன்றவற்றில் பயிற்சியின்போது எதிர்பாராவிதமாக காயமடைந்து கை, கால்களை இழந்தவர்கள் ராணுவப் பணிக்கு சேர்க்கப்படுவது இல்லை. அந்த வகையில், கடந்த 1985 முதல் இதுவரை சுமார் 500 பேரும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 20 பேரும் மாற்றுத் திறனாளியாகி வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.