
சென்னை: மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு, முடித்து வைக்க ஏதுவாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள, மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கக் கூடிய வழக்குகளை அடையாளம் கண்டு, விரைந்து முடிக்க, உச்ச நீதிமன்ற குழு, விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை அமர்வு, தாமாக முன் வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துள்ளன. சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா உத்தரவின்படி, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி முன் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இன்று விசாரணைக்கு வந்தது.