
ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய சிவகங்கை ராணுவ வீரருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியா அழித்தது. அதில் இந்தியாவை தாக்குவதற்காக பாகிஸ்தான் ஏராளமான ட்ரோன்களை அனுப்பியது. அப்போது, எல்லை பாதுகாப்புப் பணியில் இருந்த சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முத்தூர் ஊராட்சியிலுள்ள குறிச்சியைச் சேர்ந்த ராணுவ வீரர் கந்தன் (48), பாகிஸ்தான் ட்ரோன்களை செயலிழக்கச் செய்தார்.