
சமீபத்தில் இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் மணிரத்னம் ஆகியோரது படங்கள் பெரும் தோல்வியை தழுவின. இதனால் இணையத்தில் பலரும் இருவரையும் கடுமையாக விமர்சித்தனர். ஆனால், இருவரையும் அவ்வளவு எளிதாக கடந்துவிட முடியாது என்று ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் மற்றும் ஷங்கர் படங்கள் தோல்வி குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பேட்டி ஒன்றில், “மணி சார் மற்றும் ஷங்கர் சார் இருவரின் ஒரு படத்தின் தோல்வியை வைத்து அவர்களை எடை போட்டுவிட முடியாது. ஷங்கர் சாரை ஒரு சாதாரண கமர்ஷியல் இயக்குநராக எடுத்துக்கொள்ள முடியாது. பிரம்மாண்ட படங்களில் வீட்டுக்கு எடுத்துச் சொல்லக் கூடிய ஒரு மெசேஜ் சொல்கிறார்.