
திமுக மேயர்களுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. கோவை, நெல்லை, மதுரை, சேலம், காரைக்குடி மேயர்களைத் தொடர்ந்து இப்போது திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமாருக்கு எதிராகவும் திமுக-வினர் போலீஸ் பஞ்சாயத்து வரைக்கும் போயிருக்கிறார்கள்.
தேமுதிக இறக்குமதியான திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கிறார். இவருக்கும், சீனியரான மத்திய மாவட்டச் செயலாளர் க.செல்வராஜூக்கும் ஆரம்பத்திலிருந்தே அவ்வளவாய் பிடிக்காது. போதாதுக்கு மாநகர் வடக்கு செயலாளர் தங்கராஜுக்கு எதிராகவும் தினேஷ்குமார் காய்நகர்த்தியதால் அவரும் இப்போது தினேஷ்குமாருக்கு எதிராக நிற்கிறார்.