• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் செப்​டம்​பரில் முழு​திறனில் மின் உற்​பத்தி செய்​யப்​படும் என மின் வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர். ரூ.10,158 கோடி மதிப்​பில் கட்​டப்​பட்ட வடசென்னை அனல் மின்​நிலை​யத்​தின் 3-வது அலகு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்​கப்​பட்​டது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்​தில்​தான் சோதனை ஓட்​டம் நடத்​தப்​பட்டு மின் உற்​பத்தி தொடங்​கப்​பட்​டது.

800 மெகா​வாட் திறன் கொண்ட 3-வது அலகில் தற்​போது சோதனை ஓட்​ட​மாக 620 மெகா​வாட் மட்​டுமே உற்​பத்தி இருக்​கிறது. மேலும், அவ்​வப்​போது தொழில்​நுட்ப கோளாறு ஏற்​பட்டு மின் உற்​பத்தி நிறுத்​தப்​பட்டு வந்த நிலை​யில் தற்​போது நிலை​யான உற்​பத்தி மேற்​கொள்​ளப்​படு​வ​தாக மின் வாரிய அதி​காரி​கள் தெரிவிக்​கின்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *