• August 18, 2025
  • NewsEditor
  • 0

வாராணசி: ​உத்தர பிரதேச மாநிலம் சார​நாத் நகரைச் சேர்ந்த ஒரு பெண் சார​நாத் காவல் நிலை​யத்​தில் சமீபத்​தில் ஒரு புகார் செய்​துள்​ளார். அதில், ‘‘ஷரப் ரிஸ்வி என்​பவர் தான் ஒரு இந்து எனக் கூறி என்​னுடன் பழகி​னார். அதை நம்பி திரு​மணம் செய்து கொண்​டோம். திருமண செல​வுக்​காக ரூ.5 லட்​சம் கொடுத்​தேன். அதன் பிறகு​தான் அவர் முஸ்​லிம் என தெரிய​வந்​தது. அத்​துடன் என்​னை​யும் அந்த மதத்​துக்கு மாற வேண்​டும் என கட்​டாயப்​படுத்​தி​கிறார். இதற்கு மறுப்பு தெரி​வித்து பணத்தை திருப்​பிக் கேட்​ட​தால் என்னை கொலை செய்​து​விடு​வேன் என மிரட்​டு​கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும்’’ என கூறி​யிருந்​தார்.

இதன் அடிப்​படை​யில் ரிஸ்​வியை சார​நாத் போலீ​ஸார் கைது செய்​தனர். அவரிடம் நடத்​திய விசா​ரணை குறித்து போலீஸார் கூறிய​தாவது: பரூக்​கா​பாத்​தைச் சேர்ந்த ஷரப் ரிஸ்​வி, சாம்​ராட் சிங், அஜய் குமார் மற்​றும் விஜய குமார் உள்​ளிட்ட பெயர்​களில் முகநூலில் போலி​யாக கணக்​கு​களை தொடங்கி உள்​ளார். பின்​னர் திருமண இணை​யதளங்​களில் வரன் தேடும் பெண்​களை அணுகி, தான் இந்து மதத்​தைச் சேர்ந்த ஒரு தொழில​திபர் எனக் கூறி அறி​முகம் செய்து கொண்​டுள்​ளார். திரு​மணம் செய்து கொண்ட பிறகு அந்த பெண்​களை முஸ்​லிம் மதத்​துக்கு மாறு​மாறு கட்​டாயப்​படுத்தி உள்​ளார். தன்​னுடைய உண்மை முகம் தெரிய​வந்​ததும் அந்த பெண்​களு​ட​னான தொடர்பை துண்​டித்​துக் கொண்​டுள்​ளார். இது​போல 12 பெண்​களை திரு​மணம் செய்​துள்​ளார். திரு​மணம் செய்​து​கொண்ட பிறகு பெண்​களை மதம் மாறு​மாறு கட்​டாயப்​படுத்தி உள்​ள​தால், இவருக்கு மதமாற்​றத்​தில் ஈடு​படும் அமைப்​பு​களு​டன் தொடர்பு இருக்​கிறதா என தீவிர​மாக வி​சா​ரித்​து வரு​கிறோம். இவ்​வாறு போலீ​ஸார்​ தெரி​வித்​தனர்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *