
சென்னை: பயணிகளின் தேவை அடிப்படையில், தமிழகத்தில் 21 ரயில்களுக்கு 38 கூடுதல் நிறுத்தம் வழங்கி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் வழங்க பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கைகளை ரயில்வே வாரியத்துக்கு தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது.
இதை பரிசீலித்து, தமிழகம், கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மொத்தம் 33 ரயில்களுக்கு 42 கூடுதல் நிறுத்தங்களை வழங்கி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் தமிழகத்தில் 21 ரயில்களுக்கு 38 கூடுதல் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது,