• August 18, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ராம​தாஸ் தலை​மை​யில் நடந்​தது பாமக பொதுக்​குழுக் கூட்​டம் கிடை​யாது. அந்​த கூட்​டத்​தில் எடுக்​கப்​பட்ட முடிவு​கள் கட்​சியை எந்த வகை​யிலும் கட்​டுப்​படுத்​தாது என்று கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர் கே.​பாலு தெரி​வித்​துள்​ளார். ராம​தாஸ், அன்​புமணிக்​கிடையே​யான பிரச்​சினை தொடரும் நிலை​யில், அன்​புமணி தலை​மையி​லான பாமக பொதுக்​குழுக் கூட்​டம் மாமல்​லபுரத்​தில் கடந்த 9-ம் தேதி நடை​பெற்​றது.

இதில் தலை​வ​ராக அன்​புமணி, பொதுச் செய​லா​ள​ராக வடிவேல் ராவணன், பொருளாள​ராக தில​க​பாமா உள்​ளிட்​டோர் அடுத்த ஓராண்​டுக்கு அந்த பொறுப்​பு​களில் தொடர்​வார்​கள் என்று தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது. அந்​தக் கூட்​டம் செல்​லாது என்று ராம​தாஸ் தெரி​வித்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *