
சென்னை: ராமதாஸ் தலைமையில் நடந்தது பாமக பொதுக்குழுக் கூட்டம் கிடையாது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.பாலு தெரிவித்துள்ளார். ராமதாஸ், அன்புமணிக்கிடையேயான பிரச்சினை தொடரும் நிலையில், அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.
இதில் தலைவராக அன்புமணி, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா உள்ளிட்டோர் அடுத்த ஓராண்டுக்கு அந்த பொறுப்புகளில் தொடர்வார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டம் செல்லாது என்று ராமதாஸ் தெரிவித்தார்.