• August 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக, ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை தொடங்கியது. தென் மாவட்டங்ளுக்கு புறப்படும் பாண்டியன் விரைவு ரயில் உள்பட முக்கிய ரயில்களில் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியல் வந்தது.

நிகழாண்டில் தீபாவளி பண்டிகை வரும் அக்.20-ம் தேதி (திங்கள்கிழமை ) கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவை பொருத்தவரை 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அந்த வகையில், பண்டிகைக்கு சில நாட்கள் முன்பாக, அக்.16-ம் தேதி அன்று சென்னையில் இருந்து விரைவு ரயில்களில் புறப்படுவதற்கு வசதியாக, டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *