
அரியலூர் மாவட்டம் அங்கனூரை சேர்ந்தவர் திருமாவளவன் (63). இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவராகவும், சிதம்பரம் மக்களவைத் தொகுதி எம்பியாகவும் இருந்து வருகிறார். இவரது தாயார் பெரியம்மாவின் தங்கை செல்லம்மா.
இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஆக.17) காலை செல்லம்மா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.