
சென்னை: தமிழ் அமைப்புகள் கோரும் தமிழ்ப் பாடப் புத்தகங்களை இலவசமாக அனுப்ப முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி”. நாகரிகத்தை உலகிற்கு கற்றுத் தந்த மொழி தமிழ் மொழி. எத்தனையோ மொழிகள் உலகில் இருந்தாலும், அவற்றிற்கு எல்லாம் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த, பழமை வாய்ந்த தாய் மொழியை பிற மாநிலங்களில் பயிலும் மாணவ, மாணவியர் கற்றுக்கொள்ள முடியாத அவல நிலையை திமுக அரசு தற்போது ஏற்படுத்தியுள்ளது.