• August 17, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: ​மும்பை ஜேஜே மருத்​து​வ​மனை​யில் இருந்து வங்​கதேச கர்ப்​பிணி கைதி ஒரு​வர் தப்​பிச் சென்​றார்.

போலி பிறப்​புச் சான்​றிதழை பயன்​படுத்தி இந்​திய பாஸ்​போர்ட் பெற்​றதற்​காக வங்​கதேசத்தை சேர்ந்த ரூபினா இர்​ஷாத் ஷேக் (25) என்ற பெண்ணை மும்​பை, வாஷி போலீ​ஸார் கடந்த 7-ம் தேதி கைது செய்​தனர். இதையடுத்து இவர் பைகுல்லா மகளிர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்​நிலை​யில் கடந்த 11-ம் தேதி உடல்​நலக்​குறைவு மற்​றும் 5 மாத கர்ப்​பம் தொடர்​பான மருத்​து​வப் பரிசோதனைக்​காக ஜேஜே மருத்​து​வ​மனைக்கு ரூபினா அழைத்​துச் செல்​லப்​பட்​டார். கடந்த வியாழக்​கிழமை பிற்​பகல் மருத்​து​வ​மனை கூட்​டத்தை பயன்​படுத்​திக் கொண்​டு, பாது​காப்பு பணி​யில் இருந்த காவலரை கீழே தள்​ளி​விட்டு ரூபினா தப்​பிச் சென்று விட்​டார். அவரை மும்பை போலீ​ஸார் தீவிர​மாக தேடி வரு​கின்​றனர்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *