
தேர்தல் காலத்து பரபரப்புகளின் ஒரு பகுதியாக மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை மனமுவந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது திமுக. அதிலும் குறிப்பாக, அதிமுக முன்னணி தலைவர்களை அதிமுக்கியத்துவம் கொடுத்து வரவேற்று பன்னீர் தெளிக்கும் திமுக தலைமை, அவர்களுக்கு உடனடியாக கட்சிப் பதவிகளை அளித்தும் பரவசப்படுத்துகிறது.
அந்தவகையில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தவரும் அதிமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான மருத்துவர் வா.மைத்ரேயனை அண்மையில் அறிவாலயம் அரவணைத்துக் கொண்டது. “அதிமுக தலைமை என்ன செய்ய வேண்டும் என்பதை டெல்லி தலைமை தான் முடிவு செய்கிறது” என்ற குற்றச்சாட்டைச் சொல்லி திமுக-வில் இணைந்த மைத்ரேயனை ‘இந்து தமிழ் திசை’ சிறப்புப் பேட்டிக்காக தொடர்பு கொண்டோம்.