
புதுடெல்லி: சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் தேசியக் கொடியேற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் குறித்த மிக முக்கிய அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2010-ம் ஆண்டில் இஸ்ரேல் ராணுவம், அயர்ன் டோம் என்ற வான் பாதுகாப்பு கவசத்தை நிறுவியது. எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள், ட்ரோன்களை அயர்ன் டோமில் இருந்து புறப்படும் ஏவுகணைகள் நடுவானில் அழித்துவிடும். இதை அடிப்படையாக வைத்து இந்தியாவின் வான் பாதுகாப்புக்காக சுதர்சன சக்கர வான் பாதுகாப்பு கவசம் உருவாக்கப்பட உள்ளது.