
புதுடெல்லி: நாட்டின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது டிஜிட்டல் இறையாண்மையின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நாட்டின் தொழில்நுட்ப அமைப்புகள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும். டிஜிட்டல் சுயாட்சியை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். ஆபரேட்டிங் சிஸ்டம் முதல் சைபர் பாதுகாப்பு வரை, ஆழமான தொழில்நுட்பம் முதல் செயற்கை நுண்ணறிவு வரை, அனைத்தும் நம்முடையதாக இருக்க வேண்டும்.