• August 17, 2025
  • NewsEditor
  • 0

கல்பெட்டா: கேரள மாநிலம் கல்​பெட்டா பகு​தி​யில் தனி​யார் பேருந்து ஓட்​டுன​ராக வேலை செய்​பவர் ஜெயேஷ் குமார். இவர் கல்​பெட்டா புது பேருந்து நிலை​யத்​துக்கு அரு​கில் உள்ள அம்மா லாட்​டரி கடை​யில் உள்ள ஊழியர்​களிடம் 5 தனலட்​சுமி லாட்​டரி டிக்​கெட்​டு​களை எடுத்து வைக்​கும்​படி கூறி​யுள்​ளார். அதற்​கான பணத்தை பிறகு கொடுப்​ப​தாக கூறி​யுள்​ளார். அதன்​படி ஜெயேஷ் குமாருக்கு 5 லாட்​டரி டிக்​கெட்​டு​களை ஊழியர் ஸ்வாதி சத்​யன் தனி​யாக எடுத்து வைத்து விட்​டார்.

இந்​நிலை​யில், கடந்த புதன்​கிழமை குலுக்​கல் நடை​பெற்​றது. அதில் ஜெயேஷ் குமாருக்​காக எடுத்து வைத்​திருந்த 5 டிக்​கெட்​டு​களில் ஒரு டிக்​கெட்​டுக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்​திருந்​தது. உடனடி​யாக குமாரை அழைத்து லாட்​டரி கடை ஊழியர் ஸ்வாதி தகவல் தெரி​வித்​தார். இதுகுறித்து குமார் கூறும்​போது, ‘‘ஸ்​வாதி கூறியதும் முதலில் நான் நம்​ப​வில்​லை. அவர் கிண்​டலடிக்​கிறார் என்று நினைத்​தேன். இந்த பரிசு பணத்தில் நான் வீடு வாங்குவேன்’’ என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *