
விழுப்புரம்: குடும்பத்துடன் தைலாபுரம் திட்டத்துக்கு அன்புமணி சென்ற நிலையில், புதுச்சேரி அருகே பட்டானூரில் இன்று திட்டமிட்டபடி பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என ராமதாஸ் அறிவித்து்ளார்.
பாமக சட்ட விதிகளின்படி நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழு ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். இவற்றை பாமக தலைவர் அன்புமணி நடத்தி முடித்துவிட்டார். சென்னையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில், தலைவர் பதவியில் அன்புமணி ஓராண்டுக்கு தொடர்வார் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அன்புமணி கூட்டிய பொதுக்குழு செல்லாது என தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் கடிதம் அனுப்பினார்.