
தமிழகம் முழுவதும் அனைத்து மின் கம்பங்களிலும், கேபிள் மற்றும், தனியார் இன்டர்நெட் வயர்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றால் உயிரிழப்பு ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பர் என, சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் உள்ள மின்கம்பங்கள் மற்றும், மின்பாதைகளில் இடையூறாக கேபிள் வயர்கள், விளம்பர பதாகைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் மின்வாரிய பணியாளர்கள் மின்தடை பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது மின்கம்பத்தில் கட்டப்பட்டுள்ள கேபிள் வயர்கள்மற்றும், விளம்பர பதாகைகள் காலில் சிக்கி விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.