
மும்பை: மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், விக்ரோலியில் உள்ள பார்க்சைடில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த சூழலில், மும்பைக்கு கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
மும்பை விக்ரோலியில் பார்க்சைட் மலைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு மண் மற்றும் கற்கள் இன்று அதிகாலை 2:30 மணியளவில் ஜன்கல்யாண் சொசைட்டியில் உள்ள ஒரு வீட்டின் மீது சரிந்து விழுந்தன.