
சென்னை: நாகலாந்து மாநில ஆளுநர் இல கணேசன் உடல்நிலைக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இல கணேசன் பாரதிய ஜனதா கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். அவர் தனது சிறுவயதிலேயே ராஷ்ட்ரிய சுயசேவக் சங்கத்தில் இணைந்து சிறப்பாக பணியாற்றியவர். தன் தொடர் மக்கள் பணியால், இயக்கப் பணியால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக, தமிழக மாநில தலைவராக, தேசிய துணைத் தலைவராக, உயர்ந்து இயக்கப் பணியையும் மக்கள் மேற்கொண்டவர். நாடாளுமன்ற ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு பணியையும் சிறப்பாக பணியாற்றியவர்.